Home மலேசியா அன்னையர் தினத்தில் உதவிகளை வழங்கிய லட்சுமி ஆனந்தன்

அன்னையர் தினத்தில் உதவிகளை வழங்கிய லட்சுமி ஆனந்தன்

அன்னையர் தினத்தை அவரவர் வசதிக்கேற்ப கொண்டாடினாலும் மற்றவர்களுக்கு உதவிட என்ற நோக்கில் கிள்ளான் கம்போங் ஜாவாவை சேர்ந்த லட்சுமி ஆனந்தன் 100 பேருக்கு மதிய உணவும், துணிமணிகளையும் வழங்கியுள்ளார்.

அவர் கூறுகையில் என்னுடைய தந்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்தியதாகவும், தாயார் தோட்டத்தில் வேலை செய்து தங்களை காப்பாற்றி வந்ததாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு முதன்முறையாக அன்னையர் தினத்திற்கு குறிப்பாக பிள்ளைகளால் கைவிடப்பட்டு சாலையோரத்தில் இருப்பவர்களுக்கு உதவி வழங்கியதாக அவர் கூறினார்.

மேலும் இனி வரும் காலங்களிலும் அன்னையர் தினத்திற்கும் அதே போல் தந்தையர் தினத்திற்கும் உதவி வழங்க விரும்புவதாக லட்சுமி ஆனந்தன் தெரிவித்தார்.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version