Home இந்தியா ரெம்டெசிவிர்’ தடுப்பூசி விரைவில் கைவிடப்படுமாம்!

ரெம்டெசிவிர்’ தடுப்பூசி விரைவில் கைவிடப்படுமாம்!

-மருத்துவ வட்டாரம் தகவல்

புதுடில்லி: ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்’ என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ”ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகளிடம் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ரெம்டெசிவிர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் எந்த மாறுதலையும் ஏற்படுத்தாததால், அதைக் கைவிட முடிவு செய்துள்ளோம்.
தற்போது மூன்று மருந்துகள் மட்டுமே கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன,” என அவர்  கூறியுள்ளார்.கொரோனா நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை முறையும் இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின் படி ஏற்கெனவே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version