Home மலேசியா அரசாங்க நிர்வாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – லிம் குவான் எங் கோரிக்கை

அரசாங்க நிர்வாகம் மறுசீரமைக்கப்பட வேண்டும் – லிம் குவான் எங் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா: மக்களின் நல்வாழ்வையும் பாதுகாப்பையும்  உறுதி செய்வதற்காக அரசாங்க நிர்வாகம் மற்றும் சேவை வழங்கலை மறுசீரமைக்க முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் அழைப்பு விடுத்துள்ளார்.

ஒரு அறிக்கையில், பொது சுகாதார நெருக்கடியின் போது மக்களுக்கு உண்மையில் தேவைப்படுவது கோவிட் -19 தடுப்பூசிகள் மற்றும் நிதி உதவிகள் என லிம் கூறினார்.

தடுப்பூசிகள், பொருளாதார ஊக்கப் பொதி மற்றும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதில் தோல்வியுற்றதோடு, இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியதால் டிஏபி ஏமாற்றமடைந்ததாக லிம் கூறினார்.

நேற்று அரசாங்கத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து மக்கள் “நிலையற்ற மற்றும் தலைமைமைத்துவ குறைப்பாடு ஆகியவற்றை காட்டுகின்றன” என்று அவர் மேலும் கூறினார். மேலும் தடுப்பூசிகளில் பெரும் பகுதியை வழங்குவது ஜூன் முதல் ஜூலை வரை தாமதமானது என்றும் கூறினார்.

தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தீபகற்பம் மற்றும் லாபுவானுக்கு கடுமையான இயக்க கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்தார். மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மொத்த பூட்டுதலுக்கு எதிராக புத்ராஜெயா முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version