Home உலகம் மனிதர்கள் அணிந்துள்ள காலுறையை நுகர்ந்து கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்

மனிதர்கள் அணிந்துள்ள காலுறையை நுகர்ந்து கொரோனா தொற்றை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள்

தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறுவிதமான ஆராய்ச்சிகளும் உலகெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆராய்ச்சிகளின் ஒருபகுதியாக, கொரோனா வைரஸை (SARS-CoV-2) மோப்ப நாய்கள் அடையாளம் காணுமா? என்ற ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்களை அடையாளம் காண, நாய்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட முடியும் என்று தெரியவந்துள்ளது.

மனிதர்கள் அணிந்துள்ள காலுறையை நுகர்ந்து பார்த்து, அவருக்கு கொரோன தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை மோப்ப நாய்கள் கண்டுபிடிப்பதாக பிரிட்டனை சேர்ந்த டர்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.அறிகுறிகள் இல்லாத கொரோனா பாதிப்பையும் நாய்களால் கண்டறிய முடியும் என அந்த ஆய்வு கூறுகிறது.

Previous article24 மணி நேரத்தில் நாட்டில் 63 பேர் கோவிட் தொற்றினால் பலி
Next articleகோவிட் தொற்றில் இதுவரை 115,000 சுகாதார பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version