– ஆய்வுகள் காட்டுகின்றன!
முதன் முதலாக கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் உருவானதாகவே உலகம் நம்புகிறது. இதற்கு ஆதாரங்கள் நிறைய உள்ளன். அங்கு தோன்றிய கொரோனா பல நாடுகளுக்கும் பரவிவிட்டது. இது தொடர்ந்து உருமாறி வருகிறது. கொரோனா மாற்றம் அடைந்து வருவதோடு கோடிக்கணக்கில் உயிர்களைப்பழி வாங்கியிருக்கின்றன.
உருமாறிய கொரோனாக்கள் பல நாடுகளிலும் பரவிவருகின்றன. இங்கிலாந்தில் பி 117, தென் ஆப்பிரிக்காவில் பி1351, பிரேசிலில் பி1, இந்தியாவில் பி 16172 என உருமாறிய கொரோனாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இப்படி பல வகை கொரோனாக்கள் கண்டறியப்பட்டாலும் அவை அனைத்துக்கும் எதிராக தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என கூறப்படுகிறது.
கத்தார் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, பி117 வகை கொரோனாவுக்கு எதிராக பைசர், பயோ என்டெக் நிறுவனங்கள் உருவாக்கியுள்ள தடுப்பூசி 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
பைசர், பயோஎன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசியும், அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியும் பி 16172 வகை கொரோனாவுக்கு எதிராக முறையே 88 சதவீதமும், 60 சதவீதம் செயல்திறனைக் கொண்டுள்ளன என இங்கிலாந்து சுகாதார துறையும் தெரிவித்திருக்கிறது.
தடுப்பூசியின் வேலை, கடுமையான நோய்த்தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதாகும். இதுவரை கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள முக்கிய தடுப்பூசிகள் அனைத்தும் சம்மந்தப்பட்ட கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிற வேலையைச் செய்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.