Home மலேசியா பிரபல கையுறை தொழிற்சாலையில் எண்மருக்கு கோவிட் தொற்று; தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு

பிரபல கையுறை தொழிற்சாலையில் எண்மருக்கு கோவிட் தொற்று; தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவு

கோலா பிலா: இரண்டு தினங்களுக்கு முன்னர் சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட கோவிட் -19 பரிசோதனையில் எட்டு தொழிலாளர்களுக்கு கோவிட் -19 நோய் தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, நெகிரி செம்பிலான் டியோ தொழில்துறை பகுதியில் உள்ள கையுறை உற்பத்தி தொழிற்சாலை 14 நாட்களுக்கு தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று கோலா பிலா மாவட்ட அதிகாரி முகமட் ஃபைசால் அப்துல் மனாப் கூறினார்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உட்பட அத் தொழிற்சாலையில் வேலைசெய்யும் (400 பேர்) அனைவரும் வங்காளதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தொழிலாளர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் இயக்க கட்டுப்பாட்டு ஆணையின் எஸ்.ஓ.பி மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை அவர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்வதற்காக நிலைமையை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்” என்றும் அவர் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version