Home Hot News கோவிட் தொற்றால் உயிரிழந்த சிங்கம்; கொரோனாவிற்கு விலங்குகளும் விதிவிலக்கல்ல!

கோவிட் தொற்றால் உயிரிழந்த சிங்கம்; கொரோனாவிற்கு விலங்குகளும் விதிவிலக்கல்ல!

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கோவிட்-19 தொற்று காரணமாக ஒரு பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது.

இவ் உயிரியல் பூங்கா கடந்த வருடமே முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது. இருப்பினும் இங்குள்ள 11 சிங்கங்களில் 9 சிங்கங்களுக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இனங்காணப்பட்டு அவைகள் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அப்பூங்காவில் வேலைசெய்யும் பணியாளர்கள் அனைத்துவிதமான பாதுகாப்பு உபகரணங்களுடனேயே  வேலை செய்துவருகின்றனர் என்றும் இவர்களுள் 61 விழுக்காடு பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அங்குள்ள ஏனைய விலங்குகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version