காடு– ஓர் எடுத்துக்காட்டு!
நகர்ப்புறங்களை மட்டுமே வளர்ச்சி அடைய வைக்கும் அரசியல் தலைவர்கள், இனி கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும்படி கூறியுள்ளது.
ஆனால், இணையதள வசதி என்பது அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் 4-ஜி வசதியில் இருந்து இப்போது பலரும் 5-ஜி வசதிக்கு மாறி வருகிறார்கள். ஆனால் மற்ற இடங்களில் செல்போனில் சிக்னல் கிடைப்பதும், இணையதள வசதி கிடைப்பதும் பெரும் சவாலாக உள்ளது.
கடந்த சில நாட்களாகவே அவர் தனது வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தார். அவர் தனது செல்போன் மூலம் மடிக்கணினிக்கு இணையதள வசதியை ஏற்படுத்தி வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருக்குs சரியாக செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் தனது வேலையை முடிக்க முடியாமல் அவதி அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று அவர் தனது கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதிக்கு வந்து அங்கு செல்போன் சிக்னலும், இணையதள வசதியும் கிடைக்கிறதா என்று பார்த்தார்.