Home Hot News நீர் குழாய் உடைந்ததால் 13 பகுதிகளில் நீர் விநியோகத் தடை

நீர் குழாய் உடைந்ததால் 13 பகுதிகளில் நீர் விநியோகத் தடை

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் மொத்தம் 13 பகுதிகளில் இன்று (ஜூன் 9) ஜாலான்   குவாரி என்ற இடத்தில் நீர் குழாய் உடைந்ததைத் தொடர்ந்து திட்டமிடப்படாத நீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டது.

உடைந்த குழாயில் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்ள மாலை 4 மணிக்கு நீர் வழங்கல் நிறுத்தப்பட்டதாக ஆயர்  சிலாங்கூர் கார்ப்பரேட் தகவல் தொடர்புத் தலைவர் எலினா பசேரி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செயல்முறை வியாழக்கிழமை (ஜூன் 10) அதிகாலை 4 மணிக்கு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பகுதிகள் கம்போங் செராஸ் பாரு; பாண்டன் மேவா; தாமான் மூடா; தாமான் புக்கிட் பெர்மாய்; தாமான் புக்கிட் பாண்டன்; தாமான் மாவர்; தாமான் செராயா; தாமான் மேகா; தாமான் புக்கிட் டெரடாய்; தாமான் மல்லுர்; தாமான் சாகா; தாமான் புத்ரா மற்றும் தாமான் மஸ்திகா.

பழுதுபார்ப்பு பணிகள் முடிந்ததும் நீர் வழங்கல் மீட்டமைக்கப்படும். நுகர்வோர் வளாகத்தின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து மறுசீரமைப்பு ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மாறுபடும்.

ஆயர்  சிலாங்கூர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீர் டேங்கர்களை அணிதிரட்டியுள்ளது. நுகர்வோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், டேங்கர்களில் இருந்து நீர் விநியோகத்தை எடுக்கும்போது முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்படுகினர் என்று அவர் கூறினார்.

மேல் விவரங்களுக்கு, ஆயர் சிலாங்கூர் பயன்பாடு, www.airselangor.com, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் உள்ள ஆயர் சிலாங்கூர் வலைத்தளம் போன்ற அனைத்து அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு சேனல்களையும் பார்க்கவும் அல்லது 15300 இல் ஆயர் சிலாங்கூர் ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளவும். – பெர்னாமா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version