பெட்டாலிங் ஜெயா: வேலை இல்லாமல் தனியாக வசிப்பதால் மன உளைச்சலுக்கு ஆளான ஒருவர், ஜின்ஜாங் உத்தாராவின் பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பின் 11ஆவது மாடியிலிருந்து குதிக்க முயன்றார்.
இருப்பினும், வீட்டின் ஜன்னலுக்கு வெளியே 25 வயதுடைய இந்த நபர் குதிக்க முயல்வதை கண்ட பொதுமக்கள் அவரை காப்பாற்றினர் என்று செந்தூல் மாவட்ட காவல்துறை தலைவர் பெஹ் எங் லாய் தெரிவித்தார்.
இன்று நடந்த இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல்துறையினர் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, பொதுமக்களால் மீட்கப்பட்ட நபரைக் கண்டது என்று தெரிவித்தார்.
விசாரணையின் அடிப்படையில், அந்த இளைஞர் பேராக் ஈப்போவைச் சேர்ந்தவர் என்றும் அவரது நண்பரின் வீட்டில் வசித்து வருவதாகவும் எங் லாய் கூறினார். வேலை இல்லாமல் தனியாக வாழ்ந்ததால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். பின்னர் அந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜின்ஜாங் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.