Home இந்தியா மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்

பாலியல் புகார் விளைவு !

நடிகை ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

நடிகையை ஏமாற்றிய வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பாஸ்போர்ட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், 2 வாரங்களுக்கு அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடவும் மணிகண்டனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

அண்மையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், திருமணம் செய்வதாக கூறி உறவு வைத்துக் கொள்வது கற்பழிப்பு ஆகாது என கூறியுள்ளது. எனவே, தனக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியிருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தீர்ப்புக்காக ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி மணிகண்டன் தாக்கல் செய்த மனுவை, மாவட்ட அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இந்த நிலையில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மணிகண்டன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் 2 வாரங்களுக்கு காவல்துறை முன் தினமும் ஆஜராக வேண்டும். கடவுச் சீட்டை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version