பெட்டாலிங் ஜெயா, (ஜூலை 7) :
கோவிட் -19 காரணமாக கோலாலம்பூரில் உள்ள டத்தோ கெரமாட் சந்தை நாளை ஜூலை 8 முதல் ஜூலை 14 வரை ஒரு வாரம் மூடப்படும் என்று DBKL தெரிவித்துள்ளது.
இந்த காலகட்டத்தில் கோலாலம்பூர் சிட்டி ஹாலில் உள்ள சந்தையில் எந்த வணிக நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது என்றும் அதே நேரத்தில் துப்புரவு பணிகள் நடத்தப்படும் என்றும் DBKL தெரிவித்துள்ளது.
“இந்த உத்தரவுக்கு இணங்கத் தவறும் எவருக்கும் எதிராக DBKL அமலாக்க நடவடிக்கை எடுக்கும்” என்று அது ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.