தவாவு கம்போங் தித்திங்கனில் சுமார் 50 வீடுகள் திங்கள்கிழமை (ஜூலை 19) காலை ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தன. 9, 10 மற்றும் 11 தொகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறி திங்கள்கிழமை காலை 9.33 மணியளவில் அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து 52 பணியாளர்கள் மற்றும் ஐந்து என்ஜின்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தவாவ் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் சுகூர் ஹட்டா தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, தீ இன்னும் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. காலை 10.55 மணியளவில் அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீயணைப்பு படையினருக்கு நீர் வழங்கல் கிடைப்பதில் சிரமங்கள் இருந்தன. மேலும் fire hydrant 800 மீ தொலைவில் இருந்ததால் வடிகால் நீரைப் பயன்படுத்த வேண்டியிருந்தது என்று திங்களன்று சம்பவ இடத்தில் சந்தித்தபோது அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆரம்ப அறிக்கையின்படி, தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட இழப்புகள் குறித்து ஆராயப்படுகையில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. காவல்துறை, ரேலா மற்றும் சிவில் பாதுகாப்பு படை (ஏபிஎம்) பணியாளர்கள் மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன் தீ அணைக்கப்பட்டது.