அம்னோ மற்றும் பிற எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்த போதிலும் பிரதமர் முஹிடின் யாசின் பதவி விலகவில்லை. தனக்கு மக்களவையில் போதுமான ஆதரவை இருப்பதால் ராஜினாமா செய்வதற்கான பிரச்சினை எழவில்லை என்று அவர் இன்று கூறினார்.
அம்னோவின் துணைப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் உட்பட அமைச்சர்களின் ஆதரவில் இருக்கும் முஹிடின், தனது பெரும்பான்மையை நிரூபிக்க செப்டம்பர் மாதம் மக்களவையில் தனது அரசாங்கம் மீது நம்பிக்கை வாக்கெடுப்பை முன்வைப்பதாக ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார்.