அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கீழே விழுந்தற்கான சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
கடவுளுக்கு நன்றி, அவருடைய கருணை மற்றும் உதவியால், நான் நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன் என்று ஜாஹித் இன்று ஒரு பேஸ்புக் பதிவில் கூறினார்.
அவரை கவனித்த அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கும், அவரது பார்வையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
ஜாஹித்தை சந்தித்தவர்களில் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோர் அடங்குவர். தனக்கு விரைவில் குணமடைய அட்டை அனுப்பிய யாங் டி-பெர்டுவான் மாமன்னருக்கு ஜாஹித் நன்றி தெரிவித்தார்.
ஜாஹித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் வெளிநாட்டு விசா அமைப்பு மீதான அவரது ஊழல் விசாரணையில் தாமதம் ஏற்பட்டது. இந்த வழக்கு அடுத்த வாரம் செப்டம்பர் 1 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.