Home Hot News காலை உணவு வாங்கச் சென்ற ஆடவர் கடையின் முன்னே விழுந்து இறந்தார்; சுங்கைபட்டாணியில் சம்பவம்

காலை உணவு வாங்கச் சென்ற ஆடவர் கடையின் முன்னே விழுந்து இறந்தார்; சுங்கைபட்டாணியில் சம்பவம்

கோலாலம்பூர்: வேலைக்குச் செல்வதற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக மனைவியிடம் கூறிவிட்டு வந்த ஒரு ஆடவர், சுங்கைபட்டாணி, தாமான் கெலாடியில் உள்ள உணவகத்தின் முன் கீழே விழுந்து இறந்தார்.

இன்று காலை 7.15 மணியளவில் ஒரு வாடிக்கையாளர் உணவக உரிமையாளரிடம் சொல்வதற்கு முன்பே பாதிக்கப்பட்ட நபர் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்தததாக நம்பபடுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோலா முடா மாவட்ட காவல்துறை தலைவர் அட்ஸ்லி அபு ஷா தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட ஆடவர் மயங்கி விழுந்ததும் உணவக உரிமையாளர் உடனே சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையை (HSAH) உதவிக்காக தொடர்பு கொண்டார் என்றார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், HSAH ஊழியர்கள் அந்த இடத்திற்கு வந்து பரிசோதனை செய்ததில், 57 வயதான அந்த ஆடவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணையில் “உணவக உரிமையாளரின் கூற்றுப்படி, சம்பந்தப்பட்ட நபர் தனது வாடிக்கையாளர் என்றும், வேலைக்குச் செல்வதற்கு முன் ஒவ்வொரு நாளும் காலை 7 மணியளவில் தமது கடைக்கு உணவு வாங்க வருவார் “ என்றும் அவர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ,அந்த நபர் கெடாவின் கூலிமில் உள்ள ஒரு தொழிற்சாலையில் டெக்னீஷியனாக பணிபுரிந்து வருகிறார்” என்றும் அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் இன்று காலை 6.45 மணிக்கு வேலைக்குச் செல்வதற்கு முன்பு தனது மனைவியை கடைசியாக சந்தித்ததாக அறிய முடிகின்றது.

அத்தோடு “அவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக முன்னர் தன்னிடம் கூறியதாகவும், ஆனாலும் அவர் வேலைக்கு சென்றார் எனவும் அவரது மனைவி கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.

“அவரது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்றும், வேலைக்குச் செல்வதற்கு முன்பு அந்த நபர் குறித்த கடையில் காலை உணவு வாங்குவது வழக்கம்” என்றும் அவர் கூறினார்.

போலீசின் விசாரணையில் எந்த குற்றப்பிண்ணனியும் கண்டறியப்படவில்லை என்றும் இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாகவும் அட்ஸ்லி கூறினார்.

மேலும் அந்த நபர் விழுந்து இறந்த இடத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது என்றும் அவரது உடல் கோவிட் -19 சோதனை முடிவுகளைப் பெற்ற பிறகு, பிரேத பரிசோதனைக்காக அலோர்ஸ்டாரின் சுல்தானா பாஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,” என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version