இராணுவப் பயிற்சியின் போது சுங்கை பகாங்கில் நீரில் மூழ்கி உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் இன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு அறிக்கையில், இராணுவ வீரர் லான்ஸ் கார்ப்ரல் முகமட் அஸ்ரின் முகமது ஈசாவின் சடலத்தை சம்பவ இடத்திலிருந்து 70 கிமீ தொலைவில் உள்ள கம்போங் செரெங்காமில் காலை 8.15 மணியளவில் கிராம மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
10 ஆவது பாராசூட் படைப்பிரிவைச் சேர்ந்த 25 வயதுடைய நபர், பேராவில் உள்ள கம்போங் பத்து போரில் 1,894 பணியாளர்கள் பங்கேற்ற பாரா பிரிடேட்டர் இராணுவப் பயிற்சியில் பங்கேற்றபோது ஆற்றில் விழுந்ததாக ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
அஸ்ரின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக கூறிய இராணுவம், அவரது உடலின் புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.
சுங்கைப் பட்டாணியைச் சேர்ந்த அஸ்ரின், ஞாயிற்றுக்கிழமை மாலை 4.40 மணியளவில் காணாமல் போனபோது, கம்போங் பத்து போரிலிருந்து கம்போங் போஹார் பாரு வரை சுங்கை பகாங்கை கடந்து செல்லும் பயிற்சியில் இருந்தார். மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அகமது ஷாவும் நேற்று தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் (SAR) இருந்தவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.