Home Hot News பாதுகாவலர் தேவ சகாயம் மரணத்தை கொலை குற்றச்சாட்டாக மாற்ற நீதித்துறை தலைவர் ஒப்புதல்

பாதுகாவலர் தேவ சகாயம் மரணத்தை கொலை குற்றச்சாட்டாக மாற்ற நீதித்துறை தலைவர் ஒப்புதல்

ஈப்போவில் உள்ள ஒரு அடுக்குமாடியின் நீச்சல் குளத்தில் கடந்த டிசம்பர் மாதம் பணியில் இருந்தபோது தாக்கப்பட்ட பாதுகாவலர் தேவ சகாயத்தின் வழக்கை கொலை வழக்காக வகைப்படுத்த நீதித்துறை தலைவர் (அட்டர்னி ஜெனரல்)  ஒப்புக்கொண்டார்.

சந்தேக நபர், தொழிலதிபர் அஹ்மத் நூர் அசார் முஹம்மது 33, மீது இன்று காலை தண்டனைச் சட்டம் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் அவரிடம் இருந்து எந்த வாக்குமூலமும் எடுக்கப்படவில்லை.

முன்பு ஜனவரி 6 ஆம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பாதுகாவலர் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.  அந்த  வழக்கிற்கான  தீர்ப்பு இன்று நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version