Home Hot News பதின்ம வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக வேன் ஓட்டுநருக்கு 15 ஆண்டுகள் சிறை...

பதின்ம வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக வேன் ஓட்டுநருக்கு 15 ஆண்டுகள் சிறை மற்றும் 6 பிரம்படி விதித்தது நீதிமன்றம்

கோத்தா கினபாலு: 14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக வேன் ஓட்டுநர் ஒருவருக்கு 15 வருட சிறைத்தண்டனையும், ஆறு பிரம்படிகளும் வழங்கியது நீதிமன்றம்.

அகோஸ் ஹான் சூயின் (35) என்ற அந்த வேன் ஓட்டுநர் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவரது தடுப்புக்காவலை அனுபவிக்க உத்தரவிடப்பட்டது.

செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எல்சி பிரைமஸ் தனது தீர்ப்பில், குற்றவாளி தனது தண்டனையை அனுபவித்த பிறகு மேலும் மூன்று ஆண்டுகள் போலீஸ் மேற்பார்வையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அக்கோஸ் டிசம்பர் 16, 2017 அன்று காலை 7.30 மணியளவில் கோத்தா பெலூட்டில் உள்ள ஒரு வீட்டில் அந்த 14 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

விசாரணையின் போது அரசு தரப்பு ஏழு சாட்சிகளை ஆஜர்படுத்தியது, எதிர் தரப்பில் மூன்று சாட்சிகள் சாட்சியம் அளித்தனர்.

முன்னதாக, அகோஸை பிரதிநிதித்துவப்படுத்திய வழக்கறிஞர் அல் ஹாபிட்ஸ் லோக்மேன், குற்றவாளிக்கு உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மருத்துவ சிகிச்சை தேவை என்று கூறி வாதிட்டார் ஆனால் அரசுதரப்பு வக்கீல் தூக்குத் தண்டனையை நிலை நிறுத்தக் கோரினார்.

மேலும் குற்றம்சாட்டப்பட்டவரின் உடல்நிலை காரணமாக கோவிட் -19 தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு கூட அவரை மருத்துவர் அறிவுறுத்தவில்லை என்றும் லோக்மேன் கூறினார்.

ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் தரப்பு அதிகாரப்பூர்வ அறிக்கை அல்லது மருத்துவ அறிக்கை எதுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவித்து வாதிட்டது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் வரை மரணதண்டனைக்கு தடை விதிக்க கோரி அகோஸின் விண்ணப்பத்தை நீதிமன்றம் அனுமதித்தது, எதிர்வரும் திங்கள்கிழமைக்குள் மேல்முறையீட்டு நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அதனை ஏற்றுக்கொண்டது.

மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஜாமீன் தொகை 10,000 வெள்ளியை வைப்பிலிட வேண்டும் என்றும் அவரது மேல்முறையீடு தாக்கல் செய்யும் வரை அத்தொகை நீதிமன்றில் இருக்கும் என்றும் நீதிபதி கூறினார்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் மாதத்திற்கு ஒரு முறை கோத்தா பெலூட் காவல் நிலையத்திற்கு வந்து தனது இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது.

மேலும் அகோஸ் தனது குடியிருப்பு முகவரியை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது, அத்தோடு அவர் வசிக்கும் மாவட்டத்தை விட்டு செல்ல அல்லது வெளியேற விரும்பினால், குற்றம் சாட்டப்பட்டவர் அந்த மாவட்ட காவல்துறைத் தலைவரிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் உத்தியோகபூர்வ மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார் மற்றும் வழக்கின் முன்னேற்றத்தை கண்காணிக்க மின்னணு மறுஆய்வுக்கும் அக்டோபர் 18 ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version