Home உலகம் கொரோனா முடக்கத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் ஆர்ப்பாட்டம்; 200 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

கொரோனா முடக்கத்தை எதிர்த்து ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் ஆர்ப்பாட்டம்; 200 ற்கும் மேற்பட்டவர்கள் கைது

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் கொரோனா முடக்கத்திற்கு எதிராக நடந்த, ஆர்ப்பாட்டப் பேரணியில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் 700 பேர் வரையானவர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டப் பேரணியில் ஏற்பட்ட மோதலிலேயே பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டப் பேரணி மீது போலீஸார் மிளகு புகை விசிறியதுடன் வீடுகளில் தங்கியிருக்க வேண்டும் என்ற சட்டத்தை மீறியமைக்காக 200ற்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர் .

மேலும் புறநகரங்களில் இருந்து சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடிய நிலையில், பிரதான நகருக்குள் நுழைவதை தடுக்க போலீஸார் பல வழிகளில் முற்பட்டனர்.

இதேவேளை ஆஸ்திரேலியாவின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக மெல்பர்ன் உள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version