கடந்த 24 மணி நேரத்தில் 11,332 கோவிட் -19 தொற்றுகள் பதிவாகி இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு டுவிட்டர் பதிவில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 2,220,526 ஆக உள்ளது.
சரவாக் அதிக எண்ணிக்கையிலான 2,358 தொற்றினை பதிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து சிலாங்கூர் (1,231), ஜோகூர் (1,319), கிளந்தன் (1,088), சபா (965), பினாங்கு (895), கெடா (819), பேரக் (678), பஹாங் (677), தெரெங்கானு (629), மலாக்கா (303), கோலாலம்பூர் (240), நெகிரி செம்பிலான் (89), புத்ராஜெயா (19), பெர்லிஸ் (19) மற்றும் லாபுவான் (3).