Home மலேசியா கனத்த மழையினால் பினாங்கில் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன

கனத்த மழையினால் பினாங்கில் பல பகுதிகளில் வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன

பினாங்கின் பல பகுதிகளில் நேற்று பெய்த கனத்த மழை காரணமாக  தாழ்வான பல பகுதிகளில் திடீரென வெள்ளம்,லேசான நிலச்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தது. குறிப்பாக தீவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வேரோடு சாய்ந்த மரங்களின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாயான் லெபாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்ருல் மகாதீர் அஜீஸ், சில மணிநேரங்கள் மட்டுமே மழை பெய்ததால் திடீர் வெள்ள சம்பவத்தால் அதிர்ச்சியடைந்ததாக கூறினார். கனமழை ஒரு மணி நேரம் மட்டுமே நீடித்தது, ஆனாலும் வெள்ளம் இன்னும் வடியவில்லை என்று அவர் புதன்கிழமை (செப்டம்பர் 29) கூறினார்.

தெலோக் கும்பாரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கம்போங் சூலுக், கம்போங் நெலாயன், கம்போங் பாயா மற்றும் கிளஸ்டர் ஹவுஸ் ஆகியவை அடங்கும் என்று அவர் கூறினார். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் குடியிருப்பாளர்கள் யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை அல்லது வெளியேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த மழையால் ஜாலான் கெர்டாக் சங்குல், பத்து உபான் மற்றும் தஞ்சோங் பூங்கா ஆகிய இடங்களிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

தாமான் ஶ்ரீ  செத்தியா கிராம சமூக மேலாண்மை கவுன்சில் (MPKK) தலைவர் கோய் செங் லாய், நேற்றிரவு 9.30 மணியளவில் குடியிருப்பாளர்களிடமிருந்து துயர அழைப்புகளைப் பெற்று சுமார் 45 நிமிடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் பினாங்கு தீவு நகர சபை (MBPP) மூலம் வேரோடு சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டன.

மவுண்ட் எர்ஸ்கின் அருகே ஒரு சிறிய நிலச்சரிவும் இருந்தது.ஆனால் நிலச்சரிவில் இருந்து குப்பைகள் அகற்றப்பட்டு, சாலையின் ஒரு பகுதி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். தஞ்சோங் பூங்கா மிதக்கும் மசூதிக்கு அருகில் விழுந்த மரங்களும் அகற்றப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கெடாவில், செவ்வாய்க்கிழமை மாலை இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால் சிக் மற்றும் கோலா மூடாவின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சிக்கில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் கம்போங் லாந்தாய், கம்போங் பினாங் மற்றும் கம்போங்  மலாக்கா ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட 30 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு Sekolah Kebangsaan Gulau உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கோலமூடாவில், குருனில் உள்ள மூன்று கிராமங்கள் – கம்போங் செங்கை சுங்கை இபோர், கம்போங் சுங்கை பாங்காக் மற்றும் கம்போங் பத்து தீகா ஆகியவையும் பாதிக்கப்பட்டன. இருப்பினும், அந்த பகுதியில் எந்த வெளியேற்ற மையமும் செயல்படுத்தப்படவில்லை. அதிகாலை 1 மணியளவில் மழை நின்ற பிறகு அதிகாலையில் வெள்ளம் குறைந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version