நீண்ட நாள் உயிருடன் வாழ வேண்டுமானால், ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், நுரையீரல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனெனில் நுரையீரல் தான் சுவாசிக்கும் ஆக்சிஜனை வடிகட்டி, ஒட்டுமொத்த உடலுக்கும் கொண்டு செல்கிறது. நுரையீரலில் பிரச்சனை ஏற்படும் போது, உடலில் ஆக்சிஜன் ஓட்டம் தடைபடத் தொடங்குகிறது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.
இதுமட்டுமின்றி, ஒருவர் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, காசநோய், ஐஎல்டி, நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு பலியாகலாம்.
ஆனால் பெரும்பாலான மக்கள் ஆரம்பத்திலேயே உடலில் உள்ள நோயைப் புரிந்து கொள்வதில்லை. இதனால் பிரச்சனை தீவிரமாகும் போது, அதைக் கையாள்வது கடினமாக உள்ளது. இம்மாதிரியான சூழ்நிலையில், நாம் ஒவ்வொருவரும் நுரையீரல் பெரிய ஆபத்தில் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இதன் மூலம் பிரச்சனையை ஆரம்பதிலேயே தீர்க்க முடியும்.
நெஞ்சு வலி: நீங்கள் நீண்ட காலமாக நெஞ்சு வலியை அனுபவித்து வந்தால், அதைப் புறக்கணிக்காதீர்கள். ஏனென்றால், இது நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, இருமல் அல்லது மூச்சுத் திணறலை நீண்ட காலம் அனுபவித்தால், அதையும் தவிர்க்க வேண்டாம்.
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், இவற்றை சாதாரணமாக நினைத்து விடாமல், மருத்துவரை சந்தித்து பரிசோதித்து என்னவென்று தெரிந்து கொண்டு, சிகிச்சை மேற்கொள்ளுங்கள். இல்லாவிட்டால், உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும்.