Home மலேசியா கோலாலம்பூர் பத்து மூடா பிபிஆரில் 17 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையானது

கோலாலம்பூர் பத்து மூடா பிபிஆரில் 17 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையானது

கோலாலம்பூர் பத்து மூடா மக்கள் வீட்டமைப்பு திட்டத்தின் (பிபிஆர்)  பிளாக் B பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 17 மோட்டார் சைக்கிள்கள் இன்று அதிகாலை எரிந்தன. அதிகாலை 2.49 மணிக்கு தீ விபத்து குறித்து அழைப்பு வந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்தது.

தெற்கு கோம்பாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட குழு விரைந்து அந்த இடத்திற்கு விரைந்ததாக செயல்முறை கமாண்டர் முகமது இர்வான் யாகோப் கூறினார். இந்த தீ விபத்தில் 17 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாயின.  ஆறு யமஹா மற்றும் ஹோண்டா வகைகளை உள்ளடக்கியது. இரண்டு சுசுகி மற்றும் மோடனாஸ் வகைகள் தலா ஒரு பெனெல்லி வகையை சேர்ந்தது.

இன்று அதிகாலை 3.13 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version