Home Hot News ஷாபி அப்துல்லாவின் கடப்பிதழை தற்காலிகமாக திருப்பி வழங்க நீதிமன்றம் அனுமதி

ஷாபி அப்துல்லாவின் கடப்பிதழை தற்காலிகமாக திருப்பி வழங்க நீதிமன்றம் அனுமதி

வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷாபி அப்துல்லா தனது அனைத்துலக கடப்பிதழை தற்காலிகமாக திரும்ப பெற்றுள்ளதால் அவரின் மகனின் உயர்கல்வி விஷயங்களை தீர்க்க நியூயார்க்கிற்கு செல்லவிருக்கிறார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசின் திங்கள்கிழமை (அக்டோபர் 25) முதல் டிசம்பர் 3 வரை பாஸ்போர்ட்டை தற்காலிகமாக விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கினார்.துணை அரசு வக்கீல் எஸ். நித்தியா ஆட்சேபனை தெரிவிக்காததால் ஷாஃபியின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கிடம் இருந்து 9.5 மில்லியன் வெள்ளி பணமோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஷாபி ஜாமீன் நிபந்தனைகளின் ஒரு பகுதியாக நீதிமன்றத்தில் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார்.

நஜிப், அவரது மனைவி டத்தின் ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் மற்றும் முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி போன்ற பல்வேறு குற்றச் செயல்களுக்காக இன்னும் விசாரணையில் உள்ள மூன்று முக்கிய குற்றவாளிகளுக்கு தற்காலிக பாஸ்போர்ட் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version