கடந்த 24 மணி நேரத்தில் 5,726 கோவிட்-19 தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,442,224 ஆக உள்ளது என்றார். 5,607 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,340,390 ஆக உள்ளது.
தீவிர சிகிச்சையில் 598 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 512 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் மற்றும் 86 பேர் கோவிட்-19 தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறார்கள். இதற்கிடையில், 308 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்பட்டது. 219 நோயாளிகள் கோவிட்-19 நேர்மறை மற்றும் மீதமுள்ள 89 பேர் நேர்மறையாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 5,711 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன. இதில் 5,489 மலேசியர்கள் மற்றும் 222 வெளிநாட்டவர்கள் உள்ளனர். இறக்குமதி செய்யப்பட்ட 15 தொற்றுகள் இருந்தன. புதிய நோய்த் தொற்றுகள் பற்றி நூர் ஹிஷாம் கூறுகையில் 1.7% மட்டுமே வகை 3, 4 மற்றும் 5 தொற்றுகள். நாட்டின் கோவிட்-19 நோய்த்தொற்று விகிதம் 0.89 ஆக இருந்தது. கோலாலம்பூரில் 0.99 ஆக உயர்ந்த R-Nought நிலை உள்ளது. எந்த மாநிலமும் 1 ஐ விட அதிகமாக R-ஐ பதிவு செய்யவில்லை.