அலோர்ஸ்டார், நவம்பர் 1 :
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 446 பேரிலிருந்து இன்று 546 பேராக உயர்ந்துள்ளது.
மலேசிய குடிமைத் தற்காப்புப் படை மற்றும் கெடா பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் (PA) முஹமட் முவாஸ் முஹமட் யூசுப் இதுபற்றிக் கூறும்போது, நேற்று மாலை SK லாங்சார் வெள்ள நிவாரண மையத்திற்கு 11 குடும்பங்களைச் சேர்ந்த 46 பேர் வெள்ளம் காரணமாக தஞ்சமடைந்தனர், தற்போது வெள்ள பேரழிவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கோத்தாஸ்டார் உள்ளது என்று கூறினார்.
இன்று காலையிலிருந்து 10 வெள்ள நிவாரண மையங்கள் பென்டாங், பாலிங், போக்கோக் சேனா மற்றும் கோத்தாஸ்டார் மாவட்டங்களில் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார்.
“காலை 8 மணி நிலவரப்படி, மொத்தம், 160 குடும்பங்களைச் சேர்ந்த 546 பேர் வெள்ளம் காரணமாக வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, மாநிலத்தில் உள்ள 10 வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கெடாவில் பேலிங் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது என்றும் 90 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 279 பேர் வெள்ளத்தில் இருந்து வீடுகளிலிருந்து வெளியேறி தற்போது ஏழு நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளநர் என்று முவாஸ் கூறினார்.
நிவாரண மையங்கள் SK தஞ்சோங் பாரி, SK சியோங், திவான் ஒராங் ராமாய் பேங்கோல் டெரோம், SK டிட்டி கன்டுங், எஸ்கே தெங்கு புத்ரா, SK கெடா மற்றும் SK புலை ஆகிய இடங்களில் உள்ளன.
“பெண்டாங் மாவட்டத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 199 பேர் வெளியேற்றப்பட்டு, தானா மேராவில் உள்ள திவான் ரகான் சுகானில் தஞ்சம் புகுந்துள்ளனர், பொக்கோக்சேனாவில் உள்ள எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 22 பேர் இன்னும் சுராவ் பெர்மாடாங் நிவாரண மையத்தில் உள்ளனர்,” என்றும் அவர் கூறினார்.