ரிபைன்டு கார்போஹைட்ரேட் உணவுகள், உடலுக்கு மிகவும் தீங்கானது. அவை உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, செரிமான அமைப்பால் சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
டிமென்ஷியா எனும் மறதி நோய் நினைவாற்றல் வயதானவர்களிடையே பொதுவாக அதிகளவில் காணப்படும். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி மற்றும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்காது. அவர்களால் சுயமாக முடிவெடுக்கவும் முடியாது.
மரபியல், வயது, வாழ்க்கை முறைகளுடன் தவறான உணவு முறையும் இந்த பாதிப்புக்கு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது. வளர்ந்து வரும் தலைமுறையினரிடமும் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து வருவதால் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்துவது சிறந்தது.
1. டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும் உணவுகள் : உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், ஊட்டச்சத்துக்கு மிக்க உணவுகளையும் உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்தையும் உணவுகளால் மேம்படுத்த முடியும். சுவைக்காக உண்ணும் பதப்படுத்தப்பட்ட அல்லது ஆரோக்கியமற்ற உணவுகள் மனச்சோர்வை உண்டாக்கி, மன அழுத்தம் மற்றும் கவலைகளை உருவாக்க வல்லது.
இந்த உணவு பழக்கம் டிமென்ஷியா என்றும் நினைவாற்றல் இழப்புக்கும் வழிவகுக்கும். குறிப்பாக, கார்போஹைட்ரேட் நிறைந்த நொறுக்குத்தீனி பண்டங்களை சாப்பிடுவது, விரைவாக டிமென்ஷியாவை நோக்கி தள்ளும்.
கார்போஹட்ரேட் உணவுகள் : ரிபைன்டு கார்போஹைட்ரேட் உணவுகள், உடலுக்கு மிகவும் தீங்கானது. அவை உடலில் குளுக்கோஸ் அளவை அதிகரித்து, செரிமான அமைப்பால் சர்க்கரையாக மாற்றப்பட்டு ரத்த ஓட்டத்தில் கலக்கப்படுகிறது. அங்கு ஆற்றலை உற்பத்தி செய்ய இன்சுலின் உதவியுடன் செல்களுக்குள்ளும் நுழைகின்றன.
மற்ற கார்போஹைட்ரேட்டுகளைவிட ரிபைன்டு கார்போஹைட்ரேட்டுகள், ரத்தத்தில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்பட்டு, சர்க்கரையின் அளவை கடுமையான ஏற்ற இறங்கங்களுக்கு வழிவகுக்கின்றன. இதனால், டைப் 2 நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், டிமென்ஷியா பாதிப்பையும் எதிர்கொள்ள நேரிடுகிறது.