Home Hot News போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நாகேந்திரனின் தூக்குதண்டனைக்கு தற்காலிக தடைவிதித்தது சிங்கப்பூர் உயர்நீதிமன்றம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நாகேந்திரனின் தூக்குதண்டனைக்கு தற்காலிக தடைவிதித்தது சிங்கப்பூர் உயர்நீதிமன்றம்

சிங்கப்பூர், நவம்பர் 8 :

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் எதிர்வரும் புதன்கிழமை (நவம்பர் 10) தூக்கிலிடப்படவிருந்த மலேசியர் நாகேந்திரன் கே.தர்மலிங்கத்தின் தூக்குத் தண்டனைக்கு சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த முடிவை நாகேந்திரனின் வழக்கறிஞர் எம்.ரவி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், உயர்நீதிமன்றம் மரணதண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது” என்று ரவி மேற்கோள் காட்டினார்.

நாகேந்திரன், 33, தூக்கிலிடப்படுவதற்கு எதிரான அரசியலமைப்பு சவால்கள் இன்று zoom மூலம் விசாரிக்கப்பட்டது.

42.7 கிராம் ஹெராயின் போதைப்பொருளை சிங்கப்பூருக்குள் கொண்டு வந்ததற்காக 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version