அலோர் ஸ்டார், நவம்பர் 9 :
கெடாவில் உள்ள தற்காலிக ஏழு வெள்ள நிவாரண மையங்களில் (PPS) வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 530 ஆக இருந்து, இன்று காலை 132 குடும்பங்களைச் சேர்ந்த 500 பேராக குறைந்துள்ளது.
கெடா சிவில் தற்காப்புப் படையின் பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் மேஜர் முஹமட் முவாஸ் முகமட் யூசாஃப் இதுபற்றிக் கூறுகையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, பென்டாங் மற்றும் கோத்தா ஸ்டாரில் உள்ள PPSகளின் எண்ணிக்கை ஏழாகவே உள்ளது என்றார்.
“இன்று காலை 8 மணி நிலவரப்படி, ஏழு வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்களின் எண்ணிக்கை நேற்று மாலை 530 ஆக இருந்து 500 பேராக குறைந்துள்ளது” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“பெண்டாங்கில், 43 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர், தனா மேராவில் உள்ள திவான் ரகான் சுகன் PPSஇல் தங்கியுள்ளனர், அதே நேரத்தில் திவான் செண்டரவாசிஹ் PPSஇல் 25 குடும்பங்களைச் சேர்ந்த 81 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கோத்தா ஸ்டாரில், 64 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேர் SK தாருல் ஹிக்மா, SK கான்வென்ட், SMK கான்வென்ட் மற்றும் SMK சிம்பாங் குவாலா ஆகிய நான்கு பி.பி.எஸ்.களில் தஞ்சமடைந்துள்ளனர்,” என்று அவர் கூறினார்.
SK தாருல் ஹிக்மாவில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், மற்றும் SK கான்வெண்ட்டில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரும், SMK கான்வெண்ட்டில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 134 பேரும், மற்றும் SMK சிம்பாங் குவாலா 16 குடும்பங்களைச் சேர்ந்த 65 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக Muaz கூறினார்.