Home Hot News சரவாக் தேர்தல் குறித்து முடிவு செய்ய, நவம்பர் 24ஆம் தேதி தேர்தல் ஆணையம் கூடுகிறது

சரவாக் தேர்தல் குறித்து முடிவு செய்ய, நவம்பர் 24ஆம் தேதி தேர்தல் ஆணையம் கூடுகிறது

கோலாலம்பூர், நவம்பர் 12 :

12ஆவது சரவாக் தேர்தலுக்கான தேதிகளை முடிவு செய்ய, தேர்தல் ஆணையம் (EC) எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதி அன்று கூடுகிறது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அப்துல் கனி சாலே தலைமையில், இந்தக் கூட்டம் சரவாக்கின் கூச்சிங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என்று அதன் செயலாளர் டத்தோ இக்மல்ருடின் இஷாக் தெரிவித்தார்.

அக்கூட்டத்தில், தேர்தல் தேதி, வேட்புமனு தாக்கல் தேதி, வாக்குப்பதிவு நாள், தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தலை நடத்துவதற்கான பிற ஏற்பாடுகள், மாநில தேர்தலின் முக்கிய தேதிகள் போன்றவை விவாதிக்கப்படும்,” என்று இக்மல்ருடின் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும் கூட்டம் முடிந்தவுடன் செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சரவாக் மாநில சட்டப் பேரவை நவம்பர் 3ஆம் தேதி கலைக்கப்பட்டதன் காரணமாக, இது மாநிலத் தேர்தலுக்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version