மலேசிய தீயணைப்பு, மீட்புப்படையில் இருந்த பணிகளுக்கான 15,000 காலி இடங்களுள் 14,000 இடங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சுழல் ஏற்கெனவே பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு, மீட்புப்படையின் அதிகாரிகளின் சுமையைக் குறைத்துள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் நேற்று மலேசிய அனைத்துலக தீயணைப்பு சம்பந்தமான மாநாடு, கண்காட்சியைத் தொடக்கிவைத்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நாட்டில் குடிமக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு பொருளாதார – நாட்டின் முன்னேற்றத்தின் காரணமாக தீயணைப்புப் படைச் சேவை அவசியமாகின்றது என்றார் அவர்.
– எல்.கே. ராஜ்