Home Hot News தாயை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட உணவகத் தொழிலாளியான சின்னம்மா விடுதலை

தாயை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட உணவகத் தொழிலாளியான சின்னம்மா விடுதலை

சின்னம்மா (இடது) தனது மகள் தர்மவள்ளியுடன்

சிரம்பானில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தனது தாயைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட உணவகத் தொழிலாளி இன்று  வாதத்திற்கு அழைக்காமலேயே விடுவிக்கப்பட்டார். 56 வயதான எம்.சின்னம்மாவை விடுவிப்பதில், 14 சாட்சிகளை அழைத்து, முதன்மையான வழக்கை நிறுவ அரசுத் தரப்பு தவறிவிட்டதாக சிரம்பான் உயர்நீதிமன்ற நீதிபதி அஸ்மான் அப்துல்லா கூறினார்.

ஜூன் 30, 2017 அன்று இரவு 11.30 மணி முதல் அதிகாலை 5.20 மணி வரை, பகாவ்  பெக்கான் ஜெலாய் என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில், 70 வயதான எம் பிச்சையை சின்னம்மா கொன்றதாகக் கூறப்படுகிறது. நீதிபதி தனது வாய்மொழித் தீர்ப்பில்,  பிச்சையின் மரணத்திற்கு பிறகு அவரின் (பிச்சை)  தங்க வளையல் பேரன் வசம் இருந்ததால், அவரது பேரனின் ஆதாரம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகக் கூறினார்.

மேலும், ஒரு வேதியியலாளரின் அறிக்கை பாதிக்கப்பட்டவரின் அனைத்து விரல் நகங்களிலும் பேரனின் DNA பதிக்கப்பட்டிருப்பதைக் காட்டியது. பாதிக்கப்பட்டவர் சாட்சியுடன் போராடியதை தெளிவாகக் காட்டுகிறது  என்று அவர் மேலும் கூறினார்.

அனைத்து அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களையும் “அதிகபட்ச மதிப்பீட்டிற்கு” பிறகு சின்னம்மா தனது தாயைக் கொன்றாரா என்பதில் சந்தேகம் இருப்பதாக அஸ்மான் கூறினார். சின்னம்மா சார்பில் வழக்கறிஞர்கள் பால் கிருஷ்ணராஜா, கோ சீ கியான் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

Previous articleஜோகூரில் உள்ள சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு உதவ 332.6 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி
Next article24 மணி நேரத்தில் கோவிட் தொற்று 5,806 – குணமடைந்தோர் 7,246

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version