Home மலேசியா கிளந்தான், தெரெங்கானுவில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

கிளந்தான், தெரெங்கானுவில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கிளந்தான் மற்றும் தெரெங்கானுவில் நாளை (டிச. 4) வரை தொடர்ந்து கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு அளவிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று (டிசம்பர் 3), மெட்மலேசியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, ஜெலி,  தானா மேரா, பச்சோக், மச்சாங், பாசிர் பூத்தே மற்றும் கிளந்தனில் உள்ள கோலா க்ராய் ஆகிய இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும், தெரெங்கானுவில் உள்ள இடங்கள் பெசுட், செட்டியு, கோல நெரஸ் மற்றும் கோல தெரெங்கானு.

அந்த அறிக்கையில், குவா மூசாங் (கிளந்தான்), குவாந்தன், பெக்கான், ரொம்பின் (பகாங்) மற்றும் மெர்சிங் மற்றும் கோத்தா திங்கி (ஜோகூர்) ஆகிய இடங்களில் தொடர் மழையைக் குறிக்கும் மஞ்சள் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சரவாக்கில் உள்ள கூச்சிங், செரியன், சமரஹான், ஸ்ரீ அமான் மற்றும் பெட்டாங் ஆகிய பகுதிகளுக்கு டிசம்பர் 5-7 முதல் தொடர் மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பலத்த காற்றுடன் வடகிழக்கு காற்று வீசுவதால் பாதிக்கப்பட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் என்றும் மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version