Home Hot News ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 33 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள வெள்ள நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 33 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

கோத்தா பாரு, டிசம்பர் 8 :

இன்று காலை 9 மணி நிலவரப்படி, பாசீர் மாஸ், ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள செக்கோலா கெபாங்சான் (SK) டோக் டே என்ற இடத்தில் உள்ள தற்காலிக வெள்ள நிவாரண மையத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 குடும்பங்களைச் சேர்ந்த 33 பேராக உள்ளது என்று பாசீர் மாஸ் சமூக நலத் துறை அதிகாரி அஜிசன் அஜிஸ் தெரிவித்தார்.

கம்போங் டோக் டேவில் வசித்த பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இன்னும் வீடு திரும்ப அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அவர்களின் குடியிருப்புகள் இன்னும் ஒரு மீட்டர் உயர வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ரந்தாவ் பஞ்சாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் இம்ரான் இஸ்மாயில் இதுபற்றிக் கூறுகையில்,ரந்தாவ் பஞ்சாங்கில் உள்ள சுங்கை கோலோக் சாதாரண நீர் மட்ட வாசிப்பு அளவைக் காட்டுவதாகவும், அப்பகுதியில் தற்போது வானிலை வெயிலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

-பெர்னாமா

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version