ஷா ஆலம், டிசம்பர் 25 :
இன்று காலை நிலவரப்படி, சிலாங்கூரில் உள்ள 90 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,406 ஆகக் குறைந்துள்ளது.
சமூக நலத்துறையின் (JKM) பேரிடர் தகவலின் அடிப்படையில், 4,859 குடும்பங்களைச் சேர்ந்த, 11,782 பெரியவர்கள், அவற்றில் 6,074 ஆண்கள் மற்றும் 5,708 பெண்கள். மற்றும் 5,264 சிறுவர்களில் 2,672 ஆண்பிள்ளைகளும் 2,580 பெண்பிள்ளைகளும் 372 கைக்குழந்தைகளும் உள்ளனர்.
மேலும் 719 மூத்த குடிமக்கள் மற்றும் 113 ஊனமுற்றோர் ஆகியோர் வெள்ள நிவாரண மையங்களில் இன்னமும் தங்கியிருப்பதாக JKM பதிவுகள் தெரிவிக்கின்றன.