Home Hot News சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,611 பேர் இன்னமும் 37 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,611 பேர் இன்னமும் 37 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

ஷா ஆலம், டிசம்பர் 28 :

இன்று காலை 8.26 மணி நிலவரப்படி, சிலாங்கூர் முழுவதும் 2,149 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 7,611 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக நிவாரண மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சமூக நலத்துறையின் (ஜேகேஎம்) பேரிடர் தகவல் விண்ணப்பத்தின்படி, 11வது நாளான இன்று சிலாங்கூர் முழுவதும் 37 நிவாரண மையங்கள் செயல்பாட்டிலுள்ளன.

நேற்று சிலாங்கூர் முழுவதும் 45 பிபிஎஸ்ஸில் 8,644 பேர் தங்கியிருந்தனர். நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

“இன்று தங்க வைக்கப்பட்டுள்ள மொத்தம் 7,611 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 35 மாற்றுத்திறனாளிகள் (OKU), 284 மூத்த குடிமக்கள், 2,232 குழந்தைகள் மற்றும் 5,192 பெரியவர்கள் ஆகியோர் அடங்குவர்” என்று JKM இன் தரவுகள் காட்டுகின்றன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version