Home COVID-19 பேராக் ஊடகப் பிரிவினர் 60 பேர் பேராக் சமூக சிறப்பு மருத்துவமனையில் தங்களுக்கான பூஸ்டர்...

பேராக் ஊடகப் பிரிவினர் 60 பேர் பேராக் சமூக சிறப்பு மருத்துவமனையில் தங்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுகின்றனர்

ஈப்போ, ஜனவரி 3 :

பேராக்கில் உள்ள 13 ஏஜென்சிகளைச் சேர்ந்த சுமார் ஊடகப் பிரிவினர் 60 பேர் இங்குள்ள பேராக் சமூக சிறப்பு மருத்துவமனை (PCSH) தடுப்பூசி மையத்தில் (PPV) கோவிட்-19 தடுப்பூசியின் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள உள்ளனர்.

பேராக் சமூக சிறப்பு மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி நிக்கோலஸ் சான் இதுபற்றிக் கூறுகையில், பூஸ்டர் தடுப்பூசிகளின் விநியோகம் இன்று முதல் மூன்று நாட்களுக்கு கட்டம் கட்டமாக நிர்வகிக்கப்படும் என்றார்.

இது சம்பந்தமாக, நிக்கோலஸ் கூறுகையில், இன்று மருத்துவமனையில் தினமும் சுமார் 400 பேர் கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுகின்றனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று அவர் கூறினார்.

“ஓமிக்ரான் மாறுபாடு இப்போது மிகவும் வேகமாக பரவுவதால், பூஸ்டர் தடுப்பூசிக்காக ஆறு மாதங்களுக்குப் பிறகு காத்திருக்கத் தேவையில்லை என்று சுகாதார அமைச்சகம் அறிவித்ததிலிருந்து மருத்துவமனைக்கு மக்கள் மிகவும் ஆர்வமாக வருகை தருகின்றனர் ,” என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மே 31 ஆம் தேதி மருத்துவமனையில் பிபிவி செயல்படத் தொடங்கியதில் இருந்து பூஸ்டர் தடுப்பூசி உட்பட 40,300 பெறுநர்களுக்கு தடுப்பூசிகளை இதுவரை தமது மருத்துவமனை செலுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version