Home Hot News வணிக வளாகத்தில் காரில் இறந்த நிலையில் இருந்த பத்திரிகையாளர்

வணிக வளாகத்தில் காரில் இறந்த நிலையில் இருந்த பத்திரிகையாளர்

அலோர் ஸ்டாரில்  உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரில் பத்திரிகையாளர் ஒருவர் இறந்து கிடந்ததாக தி ஸ்டார் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது. கோத்தா செடார் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அஹ்மத் ஷுக்ரி மாட் அகிர் கூறுகையில் இறந்த என்ஜி பூன் எங் 44, என்ஜின் இயங்கும் நிலையில் அவரது காரில் சுயநினைவின்றி காணப்பட்டார்.

அதிகாலை 4 மணியளவில் மலேசியன் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சிஸ்டத்திலிருந்து (MERS-999) எங்களுக்கு அழைப்பு வந்தது, சம்பவம் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது  என்று அவர் கூறினார். முதற்கட்ட விசாரணையில், இந்த சம்பவத்தில் எந்த குற்ற செயலும் நடைபெறவில்லை என தெரியவந்தது.

பாதிக்கப்பட்டவரின் உடல், அவருக்கு பிரேத பரிசோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, கோவிட்-19 பரிசோதனைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. Ngக்கு திருமணமாகவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version