சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 3,270 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவான 2,842 தொற்றுகளில் இருந்து அதிகரித்துள்ளது.
ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,773,156 ஆக உள்ளது என்றார்.
3,195 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,701,808 ஆக உள்ளது. இதற்கிடையில், 257 நோயாளிகள் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
அவர்களில் 197 பேர் கோவிட்-19 தொற்று எனவும் மற்றும் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள். 137 நோயாளிகளுக்கு சுவாச உதவி தேவைப்படுகிறது. 89 நோயாளிகள் கோவிட்-19 தொற்றும் மற்றும் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறார்கள்.
இன்று 3,018 உள்ளூர் நோய்த்தொற்றுகள் உள்ளன, இதில் 2,916 மலேசியர்கள் மற்றும் 102 வெளிநாட்டினர் மற்றும் 252 இறக்குமதி செய்யப்பட்ட தொற்றுகள் உள்ளன.
இவர்களில், நோயறிதலின் போது 2.1% நோயாளிகள் மட்டுமே வகை 3, 4 அல்லது 5 இல் இருந்தனர்.
நாட்டின் கோவிட்-19 தொற்று விகிதம் 0.99 ஆக இருந்தது, புத்ராஜெயாவில் அதிக R-nought (R0) அளவு 1.01 ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கிளந்தான் 1.00 ஆக உள்ளது. மீதமுள்ள மாநிலங்கள் மற்றும் கூட்டாட்சி பிரதேசங்கள் R0 அளவை 1.00க்குக் கீழே பதிவு செய்துள்ளன. இன்று நான்கு புதிய கொத்துகள் பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் கூறினார்.