Home Hot News தனது 62ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நாட்டின் பிரதமர்

தனது 62ஆவது பிறந்த நாளை நேற்று கொண்டாடிய நாட்டின் பிரதமர்

டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், நேற்று தனது 62வது பிறந்தநாளைக் கொண்டாடியதையொட்டி வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். வாழ்த்துகள், பிரார்த்தனைகள் மற்றும் பலவற்றை வழங்கிய அனைவருக்கும் நன்றி. அவர் தனது முகநூல் மூலம் நேற்று இரவு ஒரு பதிவில் கூறினார்.

பிறந்தநாள் கேக்குடன் (அனிச்சல்) தனது மனைவி டத்தின்ஸ்ரீ முஹைனி ஜைனல் அபிதீன் மற்றும் பேத்தி ஜீனெல்லே நிகா மண்டகி ஆகியோரின் புகைப்படத்தை இணைத்த பிரதமர், தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான ஆயத்தங்களைத் தனது குழந்தைகள் செய்து வருவதாகக் கூறினார்.

இஸ்மாயில் சப்ரி தனது குழந்தைப் பருவ நினைவுகளை நினைவு கூர்ந்தார், அவர் தனது பிறந்தநாளை அரிதாகவே கொண்டாடியதாக கூறினார். ஆனால் தனக்கு ஒரு குழந்தை இருக்கும்போது, ​​ஒவ்வொரு ஆண்டும் தனது குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவார்.

நான் வயதாகும்போது, ​​​​குழந்தைகள் வளர்ந்து விடுகின்றனார். அவர்கள்தான் எனக்கும் என் மனைவிக்கும் ‘பிறந்தநாளைக் கொண்டாட’ எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இஸ்மாயில் சப்ரி 18 ஜனவரி 1960 அன்று பகாங்கின் தெமர்லோவில் பிறந்தார்.

Previous articleஆறு நாட்களுக்கு முன்பு வனப்பகுதியில் காணாமல் போன 9 வயது சிறுமியை தேடும் பணி தொடர்கிறது
Next article‘Tangguh mesyuarat PSC kerana isu Azam Baki rumit’

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version