சுகாதார அமைச்சகம் கடந்த 24 மணி நேரத்தில் 4,915 கோவிட் -19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இது நேற்று பதிவு செய்யப்பட்ட 5,139 நோய்த்தொற்றுகளிலிருந்து சிறிது குறைவு. ஒரு அறிக்கையில், சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, மொத்த நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை இப்போது 2,865,984 ஆக உள்ளது என்றார்.
3,056 நோயாளிகள் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,780,771 ஆக உள்ளது. இன்று 14 புதிய கிளஸ்டர்கள் (கொத்துகள்) பதிவாகியுள்ளதாக நூர் ஹிஷாம் தெரிவித்தார்.