தேசிய உயிரியல் பூங்கா தொழிலாளர்கள் சுமார் 30 பேர், ஜனவரி 2018 முதல் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை கோரி நேற்று மிருகக்காட்சிசாலைக்கு வெளியே மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் கலந்து கொண்ட மலேசிய விலங்கியல் சங்கத் தலைவர் கே.மாறன், 2019 அக்டோபரில் வழங்கப்பட்ட தொழில்துறை நீதிமன்றத் தீர்ப்புக்கு உயிரியல் பூங்கா நிர்வாகம் இன்னும் இணங்கவில்லை என்று கூறினார். சம்பள உயர்வு, கொடுப்பனவுகள் மற்றும் போனஸ் தொடர்பாக தொழிற்சங்கத்திற்கு தொழில்துறை நீதிமன்றம் ஆதரவாக இருந்ததாக மாறன் கூறினார்.
இருப்பினும், இன்று வரை நீதிமன்றத் தீர்ப்பை நிர்வாகம் பின்பற்றவில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணும்படி அவர்களிடம் கூறியுள்ளோம் ஆனால் பலனில்லை. எங்கள் உரிமைகளைக் கோரி மறியல் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மறியல் போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை. மிருகக்காட்சிசாலை நிர்வாகம் வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக் கோரி தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.