Home மலேசியா தொங்காட் காவல் நிலையம் அருகே நிலச்சரிவு

தொங்காட் காவல் நிலையம் அருகே நிலச்சரிவு

தொங்காட் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டது. அதிகாலை 2.40 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கடந்த புதன்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையினால் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

கினபாத்தாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் நூருல் அஸ்லான் ஷா ஜமாலுதீன் கூறுகையில், இன்று அதிகாலை 2.45 மணிக்கு தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து பிபிபி கினபாத்தாங்கான் உறுப்பினர்கள் (156 கிலோ மீட்டர்) தொலைவில் உள்ள  இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அங்கு வந்து பார்த்தபோது, காவல் நிலைய கட்டிடத்தின் வளாகத்தின் ஓரத்தில் மண் சரிவு இருப்பது தெரியவந்தது. எங்கள் குழுவினர் தடுப்புகளை நிறுவி, வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதை உறுதி செய்தனர். காயங்கள் அல்லது உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இன்று காலை 7.05 மணிக்கு பணி முடிவடைந்தது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version