Home மலேசியா தொடரும் தடுப்புக் காவல் மரணங்கள்- இந்த ஆண்டில் 10ஆவது மரணம் ஜோகூர்பாருவில் நிகழ்ந்தது

தொடரும் தடுப்புக் காவல் மரணங்கள்- இந்த ஆண்டில் 10ஆவது மரணம் ஜோகூர்பாருவில் நிகழ்ந்தது

தடுப்புக் காவலில் இருந்த 49 வயது ஆடவர் மரணமடைந்துள்ளார். இம்முறை ஜோகூர் பாருவில் மரணம் நிகழ்ந்துள்ளது. இது தடுப்புக் காவலில் நிகழ்ந்த 10ஆவது மரணமாகும்.

புக்கிட் அமான் ஒருமைப்பாடு மற்றும் தரநிலைகள் இணக்கத் துறையின் (ஜிபிஎஸ்) இயக்குநர் அஸ்ரி அஹ்மட், ஶ்ரீ  ஆலம் போலீஸ் தலைமையகத்தில் நேற்று மரணம் நிகழ்ந்ததாகக் கூறினார்.

போதைப்பொருள் குற்றங்களுக்காக அந்த நபர் பிப்ரவரி 3 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும், நான்கு நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

பிப்ரவரி 7 ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, ஶ்ரீ ஆலம் லாக்கப்பில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 16 அன்று, பாதிக்கப்பட்டவர் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும் சிகிச்சை பெற ஜோகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த நபர் லாக்கப்பில் சுயநினைவின்றி காணப்பட்டார். பிரேத பரிசோதனை முடிவுகள் பாதிக்கப்பட்டவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version