உக்ரைன், பிப்ரவரி 24:
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், உலக நாடுகள் பதற்றத்தில் உள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரைன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், உக்ரைன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரைன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.