Home உலகம் உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன்; பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

உக்ரைனுக்கு ஆயுத உதவி வழங்கிய ஸ்வீடன்; பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

மாஸ்கோ, பிப்ரவரி 26:

இரண்டு நாட்களாக ரஷ்யாவின் பயங்கர தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்கு, ஸ்வீடன் அரசாங்கம் இராணுவ உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதையடுத்து, தங்களுக்கு உதவுமாறு நேட்டோ நாடுகளை உக்ரைன் கேட்டுக் கொண்டது. இருப்பினும், நேட்டோ நாடுகள் இராணுவ உதவி அல்லது வேறு எந்த வகையான உதவிகளிலும் மௌனம் சாதிக்கின்றன.

இதையடுத்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, உக்ரைன் அதிபருக்கு தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி தெரியும் என்றும், அவர்கள் வேண்டுமானால் பயப்படலாம் ஆனால் உக்ரைன் பயப்படாது என்றும் புலம்பினார்.

நேட்டோ நாடுகள் நேரடியாக உதவ முடியாத நிலையில், ஸ்வீடன் அரசு உக்ரைனுக்கு இராணுவ தொழிலில்நுட்ப உதவிகளை வழங்கியுள்ளது.

இது ரஷியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஸ்வீடன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேட்டோ அமைப்பில் சேர ஸ்வீடன் மற்றும் பின்லாந்து முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியா கூறி உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version