Home மலேசியா கெடாவின் குனுங் கெரியாங்கில் மலையேறிய மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்

கெடாவின் குனுங் கெரியாங்கில் மலையேறிய மூன்று பேர் காணாமல் போயுள்ளனர்

அலோர் ஸ்டார் பகுதியிலுள்ள குனுங் கெரியாங்கில் மலையேறிக் கொண்டிருந்த  மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மண்டலம் 1 தலைவர் வான் முகமட் ஹமிசி வான் முகமட் சின் கூறுகையில், வெள்ளிக்கிழமை (மார்ச் 4) மாலை 4.59 மணிக்கு சம்பவம் குறித்து தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

காலை 6 மணிக்கு மூவரும் தங்கள் நண்பர்களுடன் மலைக்கு சென்றனர். அவர்களது நண்பர்கள் மலையடிவாரத்தில் இறங்கியபோது 3 பேரும் அங்கு இல்லை என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மூன்று பேரையும் இன்னும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.  தீயணைப்பு வீரர்கள் தேடுதல் வேட்டை நடத்தியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை  என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version