சுங்கைப்பட்டாணியில் உள்ள செயற்கை ரப்பர் தொழிற்சாலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.11 மணியளவில் ஒரு சிறுமி தீயில் சிக்கி உயிரிழந்தார். பலியானவர் இந்தோனேசிய பிரஜையான மிஷா காசிஹ் (11) என அடையாளம் காணப்பட்டார். அவர் முதலாளியின் வளர்ப்பு குழந்தை என்றும் சம்பவத்தின் போது வளாகத்தின் மேல் மாடியில் உள்ள அறை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அதே தொழிற்சாலையின் இதர அறைகளில், முதலாளியின் ஐந்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஒரு வங்கதேச நாட்டவர் உட்பட இரண்டு ஊழியர்கள் இருந்தனர்.