Home இந்தியா இந்தியா அனைத்துலக விமான போக்குவரத்தை மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கிறது

இந்தியா அனைத்துலக விமான போக்குவரத்தை மார்ச் 27 ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கிறது

புதுடெல்லி, மார்ச் 9:

கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 23-ந் தேதியில் இருந்து இந்தியாவின் அனைத்துலக விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு அனைத்துலக விமான போக்குவரத்துக்கான தடை மாதாந்தம் நீட்டிக்கப்பட்டு வந்தது.

இருப்பினும் ஒப்பந்த அடிப்படையில், 35 நாடுகளுக்கு மட்டும் அனைத்துலக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட வழக்கமான அனைத்துலக விமான போக்குவரத்து, இம்மாதம் 27-ந் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது என்று இந்தியாவின் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version